×

மதுரையில் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை ‘தலைமறைவு’ தலைமை ஆசிரியர் கைது

மதுரை: அரசுப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர். மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலைபார்த்து வருகிறார். இப்பள்ளிக்கு வேறு பள்ளிகளில் இருந்து இரு ஆசிரியைகள் பணி மாறுதலாகி வந்தனர். அவர்கள் மற்ற பள்ளிகளை போல தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலனிடம் அலுவலக தேவைகளுக்காக பேசியுள்ளனர். ஆனால், அவர் அந்த ஆசிரியைகளிடம் தவறான கண்ணோட்டத்தில் பழகியதாகத் தெரிகிறது. மேலும் இரு ஆசிரியைகளுக்கும் தனித்தனியாக அவ்வப்போது பாலியல்ரீதியிலான தொல்லை கொடுத்துள்ளார். ஆசிரியைகளும் ஜோசப் ஜெயசீலனை எச்சரித்துள்ளனர்.இதனை கண்டுகொள்ளாத ஜோசப் ஜெயசீலன் செல்போனிலும் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் பணிமாறுதல் கேட்டு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு பணிமாறுதலும் கிடைத்தது. ஆனால், அவர்களை பணியில் இருந்து ஜோசப் ஜெயசீலன் விடுவிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஒரு ஆசிரியை, மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனையறிந்ததும், ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு ஜோசப் ஜெயசீலன் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் ஜோசப் ஜெயசீலனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையில் தனிப்படையினர் ஜோசப் ஜெயசீலனை செல்போன் சிக்னல் மூலம் தேடினர். அப்போது அவர் திருப்போரூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு செல்வதற்குள்  தப்பிச்சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து, அவரது வங்கிக்கணக்கை போலீசார் முடக்கும் நடவடிக்கையை எடுத்தனர்.அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் அவர் பணம் எடுத்தது தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் அவரது உருவம் பதிவாகி இருந்தது. அதில் ஜோசப் ஜெயசீலன் மொட்டை அடித்து, தாடி வைத்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் அவர் கோவை மாவட்டம் அவினாசியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் அங்கிருந்து அவர் மதுரைக்கு தப்பி வந்து விட்டதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மதுரை தெற்குவாசல் பந்தடி தெருவில் பதுங்கியிருந்த ஜோசப் ஜெயசீலனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்….

The post மதுரையில் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை ‘தலைமறைவு’ தலைமை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai Govt ,Madurai ,Joseph ,Keeraithurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை