×

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் திடீர் மரணம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே இலுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (53). வேளாண்மைத்துறை அதிகாரி. இவர், கடந்த 19ம் தேதி, திண்டுக்கல்லில் கலெக்டர் விசாகனை சந்தித்து, அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் பிரதீப் (25), பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேசன் கல்லூரியில், கடந்த 2016 முதல் மருத்துவ படிப்பு படித்து வந்தார். வரும் ஜூலை மாதத்துடன் படிப்பு முடிகிறது. அவர் கடந்த 19ம் தேதி அதிகாலை இறந்ததாக, உடன் படிக்கும் மாணவர், செல்போனில் எனக்கு தகவல் தெரிவித்தார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. எனது மகனின் உடலை சொந்த ஊரான இலுப்பப்பட்டியில் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, பிலிப்பைன்ஸிலிருந்து எனது மகனின் உடலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்….

The post பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Philippines ,Dindugul ,Kandasamy ,Lipabatti ,Gujiliyambara, Dindugul District ,TN ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...