×

குடிபோதையில் ரவுடி என்று கூறி பெண்ணை தாக்கியவர் கைது

திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த திருமழிசை முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் வீட்டின் அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்த போது அதே முத்துராஜா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் குடிபோதையில் நான் ரவுடி எம்யின் தம்பி என்றும், மேலும் நான் உடையவர் கோயில் ரவுடி என்றும் கலாட்டா செய்து கொண்டு மணிகண்டனை செங்கற்களால் தாக்க முயன்றுள்ளார். அப்போது அதனை தடுக்க வந்த மணிகண்டன் மனைவியை தாக்கியுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்….

The post குடிபோதையில் ரவுடி என்று கூறி பெண்ணை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Manikandan ,Muthuraja Street, Tirumazhisai ,Poontamalli ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்