×

கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு; இஎம்ஐ உயரும்

புதுடெல்லி: வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் அதிகரித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதுபோல் ஒரு மாதம், மூன்று மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, பாங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவைம் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் கடன் விகிதத்தை தலா 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளன. இதன்படி ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தின்படி பாங்க் ஆப் பரோடா வட்டி 7.35 சதவீதம், ஆக்சிஸ், கோடக் மகிந்திரா வங்கிகள் 7.4 சதவீதம் என நிர்ணயித்துள்ளன. இதைத்தொடர்ந்து பிற வங்கிகளும் வட்டியை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, மேற்கண்ட வங்கிகளில் தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணையான இஎம்ஐ அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன….

The post கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு; இஎம்ஐ உயரும் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Bharata State Bank ,Bank of Baroda ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...