×

பேரூர், நகரங்களுக்குட்பட்ட வார்டு தேர்தல் விண்ணப்ப படிவங்களை ஏப்.22,23ம் தேதிக்குள் வழங்க வேண்டும்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் பதினைந்தாவது பொதுத் தேர்தலில், பேரூர், நகரங்களுக்குட்பட்ட வார்டுக் கழக தேர்தல், ஏப்ரல் 28ம் தேதி நடத்தி முடிக்க வேண்டியிருப்பதால், தேர்தலில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள், மாவட்டக் கழகத்திலோ அல்லது ஒன்றிய, நகர கழகத்திலோ வேட்புமனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதனை முறையாகப் பூர்த்தி செய்து, ஏப்ரல் 22, 23ம் தேதிக்குள் தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் விண்ணப்பக் கட்டணத்துடன் வேட்புமனுவினை தாக்கல் செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை, தலைமைக் கழகப் பிரதிநிதிகள் சரிபார்த்து, வேட்புமனு பரிசீலனை செய்து போட்டியிருக்கும் வார்டுக் கழகத் தேர்தலை ஏப்ரல் 28ம் தேதிக்குள், தலைமைக் கழகப் பிரதிநிதிகள் தேதி, இடம் அறிவித்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது….

The post பேரூர், நகரங்களுக்குட்பட்ட வார்டு தேர்தல் விண்ணப்ப படிவங்களை ஏப்.22,23ம் தேதிக்குள் வழங்க வேண்டும்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ward ,Berur ,DMK ,CHENNAI ,general election ,Ward Corporation for Perur ,Urban ,
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...