×

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 35 சவரன் திருடிய வாலிபர் சிக்கினார்

ஆலந்தூர்: நங்கநல்லூர் ஐயப்பா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (61). தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தில் மாவட்ட மேலாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி இவர், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 35 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.65 ஆயிரம் திருடுபோனது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா நெல்லிக்குப்பத்தை சேர்ந்த செந்தில் முருகன் (29) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 35 சவரன் திருடிய வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Sreedar ,Nanganallur Iyappa ,Tamil Nadu ,Aditravidar Housing Corporation ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...