×

சிங்காரா வனத்தில் காட்டு யானை தாக்கி குட்டி யானை பலி

ஊட்டி:  முதுமலை  புலிகள் காப்பத்திற்குட்பட்ட சிங்காரா வனச்சரக வனப்பகுதியில் நேற்று  முன்தினம் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் வழக்கமான  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூக்குழி தடுப்பணை அருகே குட்டி  யானை இறந்து கிடப்பதை பார்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், துணை இயக்குநர் அருண்குமார் மற்றும் வன கால்நடை  மருத்துவர்கள் அப்பகுதிக்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.  பின்னர், குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். ஆய்விற்காக உடல்  பாகங்கள் சேகரிக்கப்பட்டன. முன்னதாக, முதற்கட்ட ஆய்வில் இறந்து கிடந்தது ஒரு  வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், பெரிய ஆண் காட்டு யானை கடுமையாக  தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம்  தெரியவரும் என வனத்துறையினர்  தெரிவித்தனர். …

The post சிங்காரா வனத்தில் காட்டு யானை தாக்கி குட்டி யானை பலி appeared first on Dinakaran.

Tags : Singhara forest ,Singhara forest forest ,
× RELATED முதுமலை, சீகூர், சிங்காரா...