×

தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொமுச சார்பில் திமுக பிரமுகர் கே.ஜே.அகத்தியன் நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு விழா காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். தொமுச மாவட்ட தலைவர் கே.ஏ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரவதனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காஞ்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மண்டல தலைவர் சந்துரு, தலைமை பேச்சாளர் நாத்திகம் நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், ஆட்டோ சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்டோ சங்கர், செயலாளர் அமித்பாஷா, துணை செயலாளர், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Thomusa ,DMK ,KJ Agathyan ,water pandal ,Kanchipuram Gandhi Road ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதி...