×

திருமங்கலம் அருகே பஸ்சை சிறை பிடித்து மக்கள் மறியல்

திருமங்கலம்: டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால், திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ளது மேலக்கோட்டை. காரியாபட்டி மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு மதுரையிலிருந்து தினசரி டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதில் காலை 8 மணி, மாலை 4 மற்றும் 5 மணிக்கு இயங்கப்பட்ட டவுன் பஸ்கள் சில தினங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் மேலக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் தலைமையில், அப்பகுதிமக்கள் இன்று காலை 8 மணிக்கு, மேலக்கோட்டை பஸ்ஸ்டாப் மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக காரியாபட்டியிலிருந்து வந்த டவுன் பஸ்சை சிறை பிடித்தனர். இந்த போராட்டத்தால் திருமங்கலம்-காரியாபட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் திருமங்கலம் அரசு போக்குவரத்து கிளை ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். …

The post திருமங்கலம் அருகே பஸ்சை சிறை பிடித்து மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Thirumangalam ,Melakottai ,
× RELATED திருமங்கலம் அருகே பரிதாபம் வாகனங்களில் சிக்கி புள்ளி மான்கள் பலி