×

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பென்னாகரம் : தர்மபுரி மாவட்டம், ஒனேக்கல் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு வழக்கமாக தினமும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார். இந்நிலையில் கோடைக்கு முன்னரே கடும் வெயில் வாட்டி எடுப்பதால், பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்துகொண்டு, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகளில் குளித்தும், தொங்கும் பாலத்தின் மீது ஏறி காவிரியின் அழகை ரசித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பின்னர் மீன் சமையலை ருசித்து சாப்பிட்டனர். ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், அவர்கள் வந்த வாகனங்களை நிறுத்தக்கூட இடம் இல்லாமல் வனப்பகுதிகளில் நிறுத்திச் சென்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க, ஒகேனக்கல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Bennagaram ,Dharmapuri District ,Onekal ,Tamil Nadu ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...