×

நாட்றம்பள்ளி அருகே இன்று அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி

நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்சம்பட்டி கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில்5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்னி வசந்த விழா, மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நாடகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கடந்த மாதம் 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3ம்தேதி முதல் இரவில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்று வருகிறது. இன்று காலை அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அர்ஜூனன் வேடமிட்ட கலைஞர் தபசு மரத்தில் ஏறி வரம் பெரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்….

The post நாட்றம்பள்ளி அருகே இன்று அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Arjunan ,Chandrampalli ,Nadramballi ,Thirupathur district ,Kalnarshambati village ,Thruvupati ,Amman temple ,Icoil ,Chadrampalli ,
× RELATED வெடிவிபத்து கல்குவாரியை நிரந்தரமாக மூட கோரிக்கை