×

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை

வாஷிங்டன்: ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்தது. விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக்கை நகைச்சுவையாக பேசினார். அதிருப்தியடைந்த வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.அதன்பின் எழுந்த சர்ச்சையால், வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கிறிஸ் ராக் மறுப்பு தெரிவித்து விட்டார். அதே சமயம் ஆஸ்கார் கமிட்டி இது குறித்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் மற்றும் தலைமை நிர்வாகி டான் ஹட்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆஸ்கர் விருதுகள் வழங்கும் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்திய நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வில் ஸ்மித்தை தடை செய்த முடிவானது, கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்ற நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்டது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து ஸ்மித் வெளியிட்ட அறிக்கையில், ‘அகாடமியின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன்; மதிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்….

The post ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை appeared first on Dinakaran.

Tags : Smith ,Oscars ,Washington ,Hollywood ,Will Smith ,
× RELATED அரிதான நோய் பாதிப்பு!: 2 ஆண்டுகளில்...