×

மறைமலைநகரில் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

கூடுவாஞ்சேரி: மறைமலைநகரில் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என காஞ்சி வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் அவசர கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் அவசர ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் நேற்று நடந்தது. அவை தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் கலைவாணி காமராஜ், அன்புச்செழியன், விஸ்வநாதன், பொருளாளர் பெருங்கொளத்தூர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழக மக்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்று வந்ததை எதிர்க்கட்சியினர் கொச்சைப்படுத்துகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். வரும் 10ம் தேதி மறைமலைநகரில் நடக்கும் பொது கூட்டத்துக்கு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும். பொது கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்பட பல்வேறு மாற்று கட்சியினர், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர். நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றார். இதில், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகரமன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன், பரங்கிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஆதனூர் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழமுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

The post மறைமலைநகரில் வருகிற 10ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kiramalainagar ,Minister ,Thamo Anparasan ,Guduvanchery ,Kanchi ,Dinakaran ,
× RELATED மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல்...