×

செல்போன் பறித்த தம்பதி சிக்கினர்

பெரம்பூர்: பெரவள்ளூர் ஜி.கே.எம்.காலனி 20வது தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (51), நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று வீடு திரும்பியபோது, அவரை வழிமறித்த மர்ம நபர், சரமாரி தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்து, அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். உடனே ஸ்ரீகாந்த் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், அந்த இருவரும் பைக்கில் தப்பினர். இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பல குற்ற வழக்கில் தொடர்புடைய பெரவள்ளூர் ஜி.கே.எம்.காலனி 9வது தெருவை சேர்ந்த சுரேந்திரன் (29), தனது மனைவி துர்காவுடன் (28) வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். …

The post செல்போன் பறித்த தம்பதி சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Peravallur G. K.K. MM ,Srikanth ,Colony 20th Street ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு