×

போதையில் காரை அதிவேகமாக இயக்கி நட்சத்திர ஓட்டலின் கேட்டை உடைத்த கல்லூரி மாணவன்: பாருக்குள் அனுமதிக்காததால் ஆத்திரம்

ஆலந்தூர்: கிண்டி கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஒட்டலுக்கு நேற்று மாலை காரில் வந்த வாலிபர், அங்குள்ள பாருக்கு செல்ல முயன்றார். அவர் ஏற்கனவே போதையில் இருந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், கடும் ரகளையில் ஈடுபட்டார். பின்னர், தனது காரை வேகமாக எடுத்து ஓட்டலின் நுழைவாயில் கேட் மீது வேகமாக மோதினார். இதில் அந்த கேட் உடைந்து, சாலையின் நடுவில் வந்து கார் நின்றது. இதனால், கிண்டியில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி வந்த வாகனங்கள், அவ்வழியே கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு வந்து, காரில் காயத்துடன் இருந்த வாலிபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சாலையின் நடுவே இருந்த காரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபர் முகப்பேரை சேர்ந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் (19) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post போதையில் காரை அதிவேகமாக இயக்கி நட்சத்திர ஓட்டலின் கேட்டை உடைத்த கல்லூரி மாணவன்: பாருக்குள் அனுமதிக்காததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Alandur ,Nakshatra Otel ,Kindi Kathippara ,Nakshatra Hotel ,Dinakaran ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...