- அசை kratti பாக்ஸ் ஸ்டோர்
- திருவள்ளூர்
- பெரியகுப்பம் கெயர்குலுவைத் தெரு, தியாவலன்
- 60
- பரபரப்பை
- மீராதி பெட்டி ஸ்டோர்
திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியகுப்பம் கற்க்குழாய் தெருவைச் சேர்ந்தவர் தயாளன்(60). இவர் வீட்டின் முன்பக்கம் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கடையில் தயாளனின் மனைவி மஞ்சுளா மற்றும் மகன் பூபதி ஆகியோர் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்(26) மற்றும் திருவள்ளூர் தாமரை குளக்கரை தெருவைச் சேர்ந்த பிரியன்(32) ஆகியோர் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு பணம் தர மறுத்துள்ளனர். அப்போது பூபதி மற்றும் மஞ்சுளா ஆகியோர் தண்ணீர் பாட்டிலுக்கு பணம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் பிரியன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பூபதியிடம் இருந்த ரூ.500ஐ பறித்து அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து தயாளன் திருவள்ளூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் பத்ம பபி வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் மற்றும் பிரியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்….
The post திருவள்ளூரில் பரபரப்பு கத்தியை காட்டி மிரட்டி பெட்டி கடையில் வழிப்பறி: 2 பேர் கைது appeared first on Dinakaran.