- இம்ரான் கான்
- பாகிஸ்தான் பிரதமர்
- ஜனாதிபதி
- ஆரிப் ஆல்வி
- இஸ்லாமாபாத்
- பாக்கிஸ்தான்
- ஜனாதிபதி ஆரிப் அல்வி
- தின மலர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி, விலைவாசி உயர்வு, உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னை போன்ற பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. அரசியல் பரபரப்புக்கு இடையே நாடாளுமன்றம் நேற்று கூடியது. கூட்டம் துவங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இம்ரான்கான் அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். இவற்றை ஏற்க மறுத்த பொறுப்பு சபாநாயகர், போதுமான அளவில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவையில் இல்லாததால் வாக்கெடுப்பு நடத்த முடியாது என கூறி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்தார். இதுபோன்ற சூழலில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறி வாக்கெடுப்பை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையேநாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற அதிபர் ஆரிப் ஆல்வி, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டதுடன் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இம்ரான் கானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே பாகிஸ்தானின் புதிய பிரதமர், ஷேபாஸ் ஷரிஃப் தான் என்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இம்ரான் கான் பிரதமர் இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில் ஜனாதிபதி இந்த புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். …
The post பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்: அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.