×

பெண் வக்கீலுக்கு பாலியல் சீண்டல்

பூந்தமல்லி: ஓடும் பஸ்சில் பெண் வக்கீலிடம் தகாதமுறையில் நடந்துகொண்ட நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த 28 வயது பெண். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக வேலை செய்து வருகின்றார். நேற்று வேலூருக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அரசு பஸ்சில் தாயுடன் சென்றார். அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ராகவன் (40) என்ற நபர், திடீரென வக்கீலிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து வானகரம் அருகே பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து ராகவனை கைது செய்து அழைத்துச்சென்றனர். …

The post பெண் வக்கீலுக்கு பாலியல் சீண்டல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Cauverypakkam, ,Vellore district ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது