×

வருசநாடு அருகே வைகை ஆற்றில் பாலம் கட்ட மண் சோதனை

வருசநாடு : வருசநாடு அருகே, மூல வைகை ஆற்றில் பாலம் கட்ட மண் பரிசோதனை நடத்துவதால், தர்மராஜபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு அருகே, தர்மராஜபுரம் கிராமத்தில் மூல வைகை ஆறு செல்கிறது. இதன் குறுக்கே பாலம் இல்லாததால் மழை காலங்களில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இப்பகுதி வைகை ஆற்றில், பாலம் கட்டும் பணிக்காக மண் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து 10வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ஆயுதவள்ளிமணிமாறன் கூறுகையில், ‘இப்பகுதி வைகை ஆற்றில் பாலம் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தோம். திமுக ஆட்சியில் பாலம் கட்டும் பணி தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சி அடைகிறோம். இப்பணிக்கு நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்….

The post வருசநாடு அருகே வைகை ஆற்றில் பாலம் கட்ட மண் சோதனை appeared first on Dinakaran.

Tags : Vaigai river ,Varasanadu ,Dharmarajapuram ,Vaigai ,Annakaran ,Dinakaran ,
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்