×

இந்துத்துவா சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவுவதை தடுக்க வேண்டும்: வைகோ பேச்சு

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே மதிமுக கட்சி அலுவலகத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் நாடாளுமன்ற அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மதிமுக பொதுச்செயலாளரும், எம்பியுமான வைகோ கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நாடாளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வைகோ பேசியதாவது: துன்புற்றோருக்கு உதவி செய்ய, துயர்படுபவர்களின் கண்ணீரை துடைப்பதற்கு திராவிட இயக்கம் என்றைக்கும் பாடுபடும். பெரியார் மண்ணில் இருந்து சொல்கிறேன், பெரியார், அண்ணா, கலைஞர், இன்றைக்கு மு.க.ஸ்டாலின் போன்றோர் திராவிட இயக்கத்தை கட்டிக்காத்து வரும் நேரத்தில், இந்த பாசறை அமைப்பை சீர்குலைத்து விட வேண்டும் என்று இந்துத்துவா சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சிக்கின்ற நேரத்தில் அதை தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நம்முடைய இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்….

The post இந்துத்துவா சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவுவதை தடுக்க வேண்டும்: வைகோ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Hindua Santana ,Tamil Nadu ,Vaiko ,Erode ,Madimuga Party Office ,Parliament Office ,Surambatti Nallrod ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு...