×

பீகாரில் பரபரப்பு முதல்வர் நிதிஷ் மீது தாக்குதல்

பாட்னா:  பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரை பொது நிகழ்ச்சியில் வாலிபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது சொந்த ஊரான பக்தயார்பூரில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அங்குள்ள மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பீகார் மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்  சில்பத்ரா யாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றார். இதற்காக  மேடையை  நோக்கி அவர் சென்று கொண்டிருந்த போது, திடீரென பின்னால் இருந்து வந்த வாலிபர் அவரை தாக்கினார். இதனால், நிதிஷ் குமார் நிலை குலைந்தார். உடனே, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் யார்? எதற்காக முதல்வரை தாக்கினார் என்பது  குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நிதிஷின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடியால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. …

The post பீகாரில் பரபரப்பு முதல்வர் நிதிஷ் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Bihar ,CM ,Nidish ,Patna ,Nidishkumar ,Chief President ,Chief Minister ,Nidish Kumar ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...