×

கேரளாவில் அதிவேக ரயில் பாதை சர்வே பணி நிறுத்தம்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை 532 கி.மீ. தூர அதிவேக ரயில் பாதைக்கான சர்வே பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல பகுதிகளில் சர்வே கல் பதிக்க வந்த அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.நேற்றும் எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சர்வே பணிகளை மேற்கொள்ள வந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களும் இடையே மோதல் ஏற்பட்டது. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதை தொடர்ந்து அதிவேக ரயில் பாதைக்கான சர்வே பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது….

The post கேரளாவில் அதிவேக ரயில் பாதை சர்வே பணி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kasaragod ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...