×

நடிகையிடம் ரூ.1.50 லட்சம் மோசடி

கொல்கத்தா: லேகா மித்ரா என்ற வங்காள நடிகை ஆன்லைன் மோசடிக்கு உள்ளாகி ரூ.1.50 லட்சம் பணத்தை இழந்துள்ளார். மின்சார கட்டணம் செலுத்துவது தொடர்பாக இவரை தொடர்பு கொண்ட மோசடிக்காரர்கள் வெகு சாமர்த்தியமாக நடிகையை தங்கள் வலையில் விழ வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தேறி உள்ளது. 48 வயதாகும் அந்த நடிகை, அவரின் பிறந்தநாளுக்கு முன்னர், யார் என்று தெரியாத ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்நபர் லேகாவிடம் ஒரு செயலியை குறிப்பிட்டு, அதனை மொபைலில் இன்ஸ்டால் செய்யுமாறு கூறியுள்ளார். அந்த சமயத்தில் காய்ச்சலினால் அவதிப்பட்டு வந்த லேகா, இதை பற்றி அதிகம் சந்தேகம் கொள்ளாமல் அந்த செயலியை தன்னுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்துள்ளார்.

அதன் பிறகு தான், அவர் ஏமாற்றப்பட்டது அவருக்கே தெரியவந்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் அவர் உணர்வதற்கு முன்பாகவே அவரது வங்கிக் கணக்கிற்கான ஆக்சஸ் மோசடிக்காரர்களிடம் சென்று விட்டது. அவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டு ஒன்றரை லட்சம் பணத்தை நடிகையின் கணக்கிலிருந்து திருடியுள்ளார்கள். இது தொடர்பாக லேகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

The post நடிகையிடம் ரூ.1.50 லட்சம் மோசடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kolkata ,Lekha Mitra ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...