×

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்!

நெல்லை: நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. சூது கவ்வும் படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘தும்பா’, ‘அன்பிற்கினியாள்’ படங்களில் நாயகியாக நடித்தவரும், நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று (செப்.,13) திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் சேது அம்மாள் பண்ணையில் நடந்தது. அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என கூறப்படுகிறது. புதுமண தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

The post நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ashok Selvan ,Keerthy Pandian ,Tirunelveli ,Keerthy Pandiyan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர்...