×

கல்லூரி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் நள்ளிரவு பூஜைக்கு ஆசிரமத்திற்கு சென்ற கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர்  மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்துக்கோட்டையில் பூசாரி முனுசாமி ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு, கடந்த பிப்ரவரி 13ம் தேதி நள்ளிரவு பூஜையில் தனது சகோதரியுடன் பங்கேற்ற கல்லூரி மாணவி ஹேமமாலினி ஆசிரமத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி கடந்த ஒரு மாதமாக விசாரணை மேற்கொண்டு வந்தார். இதில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பூசாரியை கைது செய்ய வலியுறுத்தியும் ஆசிரமத்திற்கு சீல் வைக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனிடையே, மாணவியின் பெற்றோர், முதல்வரின் தனிப்பிரிவிக்கு மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக காஞ்சி சரக காவல் துறை துணை தலைவர் சத்யபிரியா தெரிவித்துள்ளார்….

The post கல்லூரி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,CHENNAI ,Vellathukottai ,Oothukottai ,
× RELATED கோயில் பூசாரிக்கு எதிரான பாலியல்...