×

நடிகர் டி.ராஜேந்தர் கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது

சென்னை: நடிகர் டி.ராஜேந்தர் சென்ற கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபை பகுதியில் நடிகர் டி.ராஜேந்தர் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள  உறவினர் ஒருவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் டி.ராஜேந்தர் உறவினரை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். காரை தாமஸ் சாலையை சேர்ந்த டிரைவர் செல்வம்(29) என்பவர் ஓட்டினார். சிகிச்சை பெற்று விட்டு அன்று நள்ளிரவு டி.ராஜேந்தர் வீடு திரும்பி கொண்டிருந்தார். தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் கார் வரும் போது, முனுசாமி (70) என்ற முதியவர் சாலையை கடந்துகொண்டிருந்தார். சில  மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கியிருந்ததால் முனுசாமியால் சரிவர நடக்க  முடியாது. அதனால் தவழ்ந்தபடி சாலையை கடந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மீது டி.ராஜேந்தர் வந்த கார் மோதியது.  இதில் அந்த முதியவர் படுகாயமடைந்தார். உடனே 108 ஆம்புலான்சுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அருகிலிருந்தவர்கள் கூடி, காயமடைந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் உயிரிழந்தார். விபத்து குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிரைவர் செல்வம் கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது….

The post நடிகர் டி.ராஜேந்தர் கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : D. Rajendar ,Chennai ,D. ,Rajender ,Chennai T. Nagar ,Dinakaran ,
× RELATED எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான...