×

திருவேற்காடு அருகே டிப்ஸ் பங்கு பிரிப்பதில் தகராறு பார் ஊழியர் அடித்து கொலை: நண்பர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே கோலடி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை ஒட்டி பார் செயல்படுகிறது. இங்கு முனிராஜ் (29), முனிசெல்வம் (24) ஆகிய இருவரும் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இந்த டாஸ்மாக் பாரில் நேற்றிரவு மது அருந்திய ஒருவர் ₹100ஐ கொடுத்து, இருவரையும் சமமாக பங்கு பிரித்து கொள்ளும்படி கூறிவிட்டு சென்றிருக்கிறார். தனக்கு கிடைத்த டிப்ஸ் பணத்தில் முனிராஜ் மது குடித்துள்ளார். அதில் பாதியை முனிசெல்வத்துக்கு பங்கு தரவில்லை எனக் கூறப்படுகிறது.பின்னர் வேலை முடிந்ததும் நள்ளிரவில் குடிபோதையில் வந்த முனிராஜிடம் தனக்கு சேரவேண்டிய பங்கு பணத்தை முனிசெல்வம் கேட்டிருக்கிறார். அவர் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முனிராஜை சரமாரியாகத் தாக்கி முனிசெல்வம் கீழே தள்ளிவிட்டுள்ளார்.அவர் போதையில் விழுந்துவிட்டதாக அனைவரும் கிளம்பி சென்றனர். இந்நிலையில், இன்று காலை எழுந்து பார்த்தபோது, முனிராஜ் இறந்து கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த திருவேற்காடு போலீசார், முனிசெல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post திருவேற்காடு அருகே டிப்ஸ் பங்கு பிரிப்பதில் தகராறு பார் ஊழியர் அடித்து கொலை: நண்பர் கைது appeared first on Dinakaran.

Tags : Dispute Bar ,Thiruvedu ,Poonthamalli ,Koladi ,Tiruvetadu ,Muniraj ,Thiruvathu ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை