×

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்; எண்ணிக்கை 61 ஆக உயர்வு..! குடியரசு தலைவர் உத்தரவு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 6 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் மட்டுமே நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழக்கறிங்களாக இருந்த என்.மாலா, எஸ்.செளந்தர் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், இருவரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்ட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 14 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது….

The post சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்; எண்ணிக்கை 61 ஆக உயர்வு..! குடியரசு தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,President of the Republic ,Delhi ,N. Mala ,S. Soundar ,Dinakaran ,
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து