×

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேல் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் : இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை பிறப்பிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேல் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இன்றுமுதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கனகசபை மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரி நகரின் பல்வேறு இடங்களில் பேராட்டங்கள் நடைபெற்று வந்ததால், இந்த 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் எவ்வித போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய ஏற்கெனவே முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு பல்வேறு பிரச்னைகள் காரணமாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்து தடைவிதித்தனர். இதனால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் அனுமதிக்க வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனால் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை விதித்து வருவாய் கோட்டாட்சியர் ரவி உத்தரவிட்டுள்ளார். …

The post சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேல் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் : இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை பிறப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Sidambaram Natarajar Temple ,Kanakasabh ,Chidambaram ,Chidambaram Natarajar Temple ,Kanakasabha ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...