×

10 லட்சம் செக் மோசடி வழக்கு அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு கரூர் கோர்ட் பிடிவாரன்ட்

கரூர்: கரூர்  ஆண்டாங்கோயில் கிழக்கு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரிடம்  கிருஷ்ணராயபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ காமராஜ் கடந்த 2020ல் பிராமிசரி  நோட்டு கொடுத்து ரூ.10 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால்  அசலும், வட்டியும் காமராஜ் திருப்பித் தரவில்லை. இதற்காக கடந்த 2020 டிசம்பர் 21ம் தேதியிட்ட ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, அதில்  அசல் மற்றும் வட்டியை எடுத்துக் கொள்ளுமாறும், மீதமுள்ள தொகையை செலுத்தி  பிராமிசரி நோட்டை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அந்த  காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமின்றி திரும்பி வந்துள்ளது.இதனையடுத்து,  முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மீது கரூர் விரைவு நீதிமன்றத்தில் ராமச்சந்திரன்  காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பலமுறை சம்மன்  அனுப்பியும் காமராஜ் ஆஜராகாததால், அவருக்கு நீதிபதி சரவணபாபு நேற்று பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்….

The post 10 லட்சம் செக் மோசடி வழக்கு அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு கரூர் கோர்ட் பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Karur ,Ramachandran ,East Ambal ,Karur Andangoil ,Krishnarayapuram ,AIADMK ,MLA ,Kamaraj ,Karur Court ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு