×

தந்தை இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மகன் சாவு: திருவண்ணாமலையில் அடுத்தடுத்து பரிதாபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் வடிவேல் (92). இவரது மகன் நாராயணமூர்த்தி (38), தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரஞ்சித்பிரியா (27). 2 குழந்தைகள் உள்ளனர். வடிவேலுக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகளுக்கு தந்தையை அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலை நாராயணமூர்த்தி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் வடிவேலுக்கு திடீரென உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார். உடனே நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்கு வந்து தந்தையின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். அப்போது அவருக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார். உறவினர்கள், அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதைகேட்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வடிவேல், நாராயணமூர்த்தியின் சடலங்களை அருகருகே அடக்கம் செய்தனர்.இதுதொடர்பாக நாராயணமூர்த்தியின் மனைவி ரஞ்சித்பிரியா திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post தந்தை இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மகன் சாவு: திருவண்ணாமலையில் அடுத்தடுத்து பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Krishna Nagar, Tiruvannamalai ,Narayanamurthy ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...