×

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபருக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காரணி கலைஞர் நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(40). இவர் கணவரால் கைவிடப்பட்டு தனிமையில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வள்ளியம்மாள் தன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டில் குடிபோதையில் புகுந்த திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன்(35) என்பவர் தூங்கிக்கொண்டிருந்த வள்ளியம்மாளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பதறிப்போன அவர் அலறி கூச்சலிட்டார். இதைத்தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வள்ளியம்மாள் மப்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பரந்தாமனை தேடி வருகிறார்….

The post தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Valliammal ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்