×

போலீசில் பொய் புகார் அளித்த 5 பேர் கைது

சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்  (26), கடந்த 18ம் தேதி இரவு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் எனது மனைவியுடன் ஆட்டோவில் சென்றபோது, அடையாளம் தெரியாத சிலர் எங்களை வழிமறித்து, ஆட்டோ கண்ணாடியை உடைத்து, மிரட்டல் விடுத்ததுடன் செல்போனை பறித்து சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். போலீசார் விசாரணையில், சம்பவத்தன்று கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கார்த்திக்கை தாக்கி, அவரது ஆட்டோ கண்ணாடியை நண்பர்கள் உடைத்துள்ளனர். கார்த்திக்கும் நண்பர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திக் அவரது நண்பர்களான புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சஞ்சய் (19), பிரேம்குமார் (20), அஜித்குமார் (20), ஜீவா (19) மற்றும் 17 வயது சிறுவன் மற்றும் கார்த்திக் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்….

The post போலீசில் பொய் புகார் அளித்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Karthik ,Pleyanthopu ,Kannigapuram ,Vasuki ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...