×

தொலைக்காட்சி நிர்வாகி வீட்டில் 37 சவரன் திருடிய டிரைவர் சிக்கினார்

பெரம்பூர்: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 7வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஐசக் லிவிங்ஸ்டன் (51). தனியார் தொலைக்காட்சியில் பங்குதாரராக உள்ளார்.  இவர், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 37 சவரன்  நகை மற்றும் ₹7 ஆயிரம் கொள்ளை போனதாக, கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், அந்த வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 3 வருடங்களாக அந்த வீட்டில் டிரைவராக பணிபுரிந்து வரும் கொடுங்கையூர் யூனியன் கார்பரேட்  காலனியை சேர்ந்த அசாருதீன் (31) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த வீட்டில் இருந்து மொத்தமாக நகைகளை எடுக்காமல் சிறுக சிறுக 37 சவரன் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.மேலும், கொள்ளையடித்த  நகைகளை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள அடகு கடையில் வைத்து, பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது இதனையடுத்து அடகு கடையில் இருந்து 37 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர், அசாருதீன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post தொலைக்காட்சி நிர்வாகி வீட்டில் 37 சவரன் திருடிய டிரைவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Isaac Livingston ,7th Main Road ,Tiruvalluvar Nagar ,Kodunkaiyur ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...