×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான கூலிப்படை தலைவன் பரபரப்பு வாக்குமூலம்

ஆலந்தூர்: மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளர் செல்வம், கடந்த மாதம் 1ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். புகாரின்படி மடிப்பாக்கம் போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த எருக்கஞ்சேரி விக்னேஷ் (21), புவனேஷ்வர் (21), திருவள்ளூர் கிஷோர்குமார் (21), வியாசர்பாடி நவீன் சஞ்சய் (21), அரக்கோணம் விக்னேஷ் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.  விசாரணையில், கொளத்தூரை சேர்ந்த முருகேசன், இந்த கூலிப்படைக்கு தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது. அம்பத்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை, கடந்த 2 நாட்களுக்கு முன், துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:மடிப்பாக்கம் குபேரன் நகர் விரிவு பகுதியில் உள்ள 4 கிரவுண்ட் நிலத்தினை சொந்தம் கொண்டாடுவதில் திமுக பிரமுகர் செல்வத்திற்கும், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன், பாபு ஆகியோருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, செல்வத்திற்கு ஆதரவான கட்டுமான நிறுவனம் ஒன்று, அந்த நிலத்தில் தனது பெயர் பலகையை வைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்து சரவணன், பாபு ஆகியோர் என்னை அணுகி, ‘‘அந்த இடத்தை எடுத்துக் கொண்டு, எங்களுக்கு தலா ₹50 லட்சம் கொடுத்தால் போதும்,’’ என்றனர். சம்பந்தப்பட்ட அந்த இடத்திற்கு சென்று, கட்டுமான நிறுவனத்தின் பெயர் பலகையை எடுத்துவிட்டு, புதியதாக ஒரு பெயர் பலகையை வைத்தேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்வம், தனது ஆதரவாளர்களுடன் பிரச்னை செய்தார். இதனால்,  திட்டமிட்டு செல்வத்தை கொலை செய்தேன். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். …

The post திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான கூலிப்படை தலைவன் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Djagagar Mukherr ,Alandur ,Kazhagam ,Wealtham ,Mukherr ,Dinakaran ,
× RELATED ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில்...