×

பூலாம்பட்டி சந்தையில் பாலமலை புளி விற்பனை அமோகம்

இடைப்பாடி : பூலாம்பட்டி சந்தையில் பாலமலை புளி விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம், பூலாம்பட்டி ஒட்டியுள்ள பாலமலை 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு விளையும் புளி பிரசித்தி பெற்றது. தற்போது அறுவடை செய்யப்பட்டு புளிகளை உரித்து கூடைகளாக கட்டி அங்கிருந்து சிங்காரத்தோப்பு, செயின் கார்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விசைப்படகில் கொண்டுவந்து பூலாம்பட்டி சந்தை திடலில் நேற்று விற்பனைக்கு வைக்கப்பட்டது. ஒரு கூடை புளி ₹1000ம் முதல் ₹1300 வரை விற்பனை செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மற்ற நகரத்தில் உள்ள புளியை விட மிகவும் ருசியாக இருக்கும். பாலமலை புளி பறித்து சுகாதாரமாக கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்.சுவை மிகுந்த புளிகூடையில் வைத்து வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். என்றனர்….

The post பூலாம்பட்டி சந்தையில் பாலமலை புளி விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : poolambatti ,Salem District ,Palamalai ,Poolammati ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...