×

ஆணவ கொலை வழக்கில் ஆயுள் யுவராஜ் உட்பட 10 பேர் அப்பீல்

மதுரை: கோகுல் ராஜ் ஆணவ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேர், தண்டனையை எதிர்த்து  ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளனர்.இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததையடுத்து ஆணவ கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் தலைமறைவானார். வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும் 5 பேரை விடுதலை செய்தும் கடந்த 8ம் தேதி தீர்ப்பளித்தது. அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கான தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்துள்ளனர். அதில், “சிசிடிவி காட்சிகள், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும். ஜாமீன் வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளனர். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது….

The post ஆணவ கொலை வழக்கில் ஆயுள் யுவராஜ் உட்பட 10 பேர் அப்பீல் appeared first on Dinakaran.

Tags : Yayayam Yuwaraj ,Aramava ,Madurai ,Yuwaraj ,Gokhul Raj Anava ,Rayam Yuwaraj ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை