காரிமங்கலம் : சென்னையை சேர்ந்த வக்கீல் கபிலன் என்பவர், நேற்று முன்தினம் ஈரோடுக்கு காரில் சென்றார். கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி செக்போஸ்ட் அருகே நள்ளிரவு வந்த போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. தொடர்ந்து தீப்பற்றியது. உடனடியாக காரை நிறுத்திய கபிலன் கீழே இறங்கி உயிர்தப்பினார். தீ மளமளவென கார் முழுவதுமாக பரவியது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post காரிமங்கலம் அருகே நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த கார் appeared first on Dinakaran.