×

மாணவியிடம் சில்மிஷம்: கணித ஆசிரியர் கைது

திசையன்விளை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, அய்யனேரியை சேர்ந்தவர் முத்தையா (43). நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றினார். இவர் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் அருகில் அமர்வதும், அவரது கையை பிடிப்பதுமாக இருந்துள்ளார். வகுப்பு நடந்தபோது கடைசி பெஞ்சில் இருந்த அந்த மாணவியை பார்த்து கண்ணடித்து, ஐ லவ் யூ என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி, வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். அதிர்ச்சிடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நள்ளிரவில், ஆசிரியர் முத்தையா வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திசையன்விளை ேபாலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் முத்தையாவை கைது செய்தார்….

The post மாணவியிடம் சில்மிஷம்: கணித ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Muthaya ,Ayaneri ,Thuthukudi District ,Govilpatti ,Paddy District ,
× RELATED சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!