×

சென்னை மாணவியை ஆந்திராவுக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: சென்னை கல்லூரி மாணவியை ஆந்திராவுக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோவில் கைது செய்தனர். சென்னை செங்குன்றம், பாடியநல்லூரில் வசித்துவரும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். கடந்த 12ம்தேதி அன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இதில், செங்குன்றம் மொண்டியம்மன் நகர், நேரு தெருவை சேர்ந்த சந்தோஷ் (19) என்ற எலக்ட்ரிஷியன் மாணவியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் தீவிரமாக தேடி மாணவியை மீட்டனர். மாணவியிடம் விசாரித்தபோது, ‘’திருமண ஆசை காட்டி ஆந்திராவுக்கு அழைத்து சென்று அங்குள்ள நண்பர் வீட்டில் தங்கவைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செங்குன்றம் போலீசார் இவ்வழக்கை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதன்படி இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி தலைமையில் போலீசார் போக்சோ  சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தோஷை நேற்று மாலை கைது செய்தனர்….

The post சென்னை மாணவியை ஆந்திராவுக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Andhra Pradesh ,Bocso ,Aavadi ,POCSO ,Chennai Sengkunram ,
× RELATED குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை...