×

உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவனை முன்னாள் எம்எல்ஏ, ஒன்றிய சேர்மன் சந்தித்து நலம் விசாரித்தனர்

திருக்கழுக்கன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன். இவரது மகன் ராஜ்கபூர் தங்கபாண்டியன் (23). இவர், உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 5ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் போர் நடந்தது வரும் நிலையில் போரினால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தன் மகனை மீட்டு தரக்கோரி தமிழக அரசுக்கு மாணவன் ராஜ்கபூரின் தந்தை ராயப்பன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தமிழக அரசின் கடும் முயற்சியால் மாணவன் ராஜ்கபூர் தங்கப்பாண்டியன் பத்திரமாக சோகண்டி வந்து சேர்ந்தான்.இந்நிலையில், நேற்று முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி தலைமையில், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் மாணவன் ராஜ்கபூர் தங்கப்பாண்டியன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது போரின்போது பட்ட துன்பங்கள், வேதனைகளை மாணவன் அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டான். மேலும், தான் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்ததற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் மாணவன் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சோகண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சரவணன், கவுன்சிலர் கெஜலட்சுமி செல்லப்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.தினேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்….

The post உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவனை முன்னாள் எம்எல்ஏ, ஒன்றிய சேர்மன் சந்தித்து நலம் விசாரித்தனர் appeared first on Dinakaran.

Tags : Former ,MLA ,Union Chairman ,Ukraine ,Thirukkalukkanram ,Rayappan ,Chokandi village ,Thirukkalukkunram ,Rajkapur Thangapandian ,
× RELATED அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா…உதயகுமார் செம அட்டாக்