×

ஆர்.கே.பேட்டை அருகே 38 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்தூர் ஊராட்சியில் வசித்து வரும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 380 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது‌. இதில் வட்டாட்சியர் தமயந்தி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே‌.துரை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர்கள் பழனி, சண்முகம், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரகு, மண்டல துணை வட்டாட்சியர்கள் லோகன், ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுமதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….

The post ஆர்.கே.பேட்டை அருகே 38 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : S. Moon ,R. ,Jalathur ,MLA ,
× RELATED மோதலை கட்டுப்படுத்த போலீஸ்...