×

பழநியில் அரசு பஸ்கள் மீது மர்மநபர்கள் கல்வீச்சு

பழநி,: பழநியில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஓபுளாபுரம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல டெப்போ உள்ளது. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பூரில் இருந்து பழநி வந்த அரசு பஸ் பயணிகளை இறக்கி விட்டு டெப்போவிற்கு சென்று கொண்டிருந்தது. சேரன்-ஜீவா நகர் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் பஸ்சின் மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பி ஒடி விட்டனர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து பஸ்சின் டிரைவர் சிவக்குமார் பழநி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுபோல் பழநி-புதுதாராபுரம் சாலையில் புளியம்பட்டி பகுதியில் திருப்பூரில் இருந்து பழநி நோக்கி வந்த 2 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். 2 சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் ஒரே நபர்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பழநியில் அரசு பஸ்கள் மீது மர்மநபர்கள் கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Palani ,Kalveesi ,Paranani ,Varani-Dindukal National Highway ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...