×

தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணையை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை  உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மீறி அவரது பிள்ளைகளுக்கு விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனை செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த 2014-ம் ஆண்டு குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பலமுறை வாய்ப்பளித்தும் விஜய் மல்லையா இதுவரை ஆஜராகவில்லை. மல்லையாவுக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் தனிப்பட்ட முறையில் அல்லது வழக்கறிஞர் மூலமாக ஆஜராக 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் கடைசி அவகாசம் வழங்கியது. அவ்வாறு செய்ய தவறினால் நீதிமன்றம் இந்த விஷயத்தை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லும் என்றும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தாவின் கோரிக்கையின் பேரில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.    …

The post தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணையை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Vijay Mallya ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...