×

தமிழக வீரர் உட்பட 2 பேர் பரிதாப பலி: பிஎஸ்எப் வீரர்கள் மோதல்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ஜலங்கியில் எல்லை பாதுகாப்பு படையின்(பிஎஸ்எப்) முகாம் உள்ளது. இது இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. ஒரு விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசார் பிஎஸ்எப் வீரர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். நேற்று காலை இந்த விவகாரம் குறித்து இரண்டு வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஒரு வீரர் மற்றொரு வீரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். பின்னர் அந்த வீரர் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் நாகை மாவட்டம் கீழையூர் அச்சுக்கட்டளையை சேர்ந்த ஞானசேகரன்(45) என்பது தெரியவந்துள்ளது. இன்னொருவர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்….

The post தமிழக வீரர் உட்பட 2 பேர் பரிதாப பலி: பிஎஸ்எப் வீரர்கள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BSF ,New Delhi ,Border Security Force ,Jalangi ,Murshidabad ,West Bengal ,Indo-Bangladesh border ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்