×

அஞ்செட்டி அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டி வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியில் நேற்று எருதாட்ட விழா நடைபெற்றது. இதில் அஞ்செட்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. எருதாட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை இதிம்மராயப்பாவின் மகன் சதீஷ் (19) என்பவர் சென்றுள்ளார். கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று சதீசை முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். எருதாட்ட விழாவில் மாடு முட்டி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post அஞ்செட்டி அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : anjetti ,Thenkanikotta ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்