×

மரத்தில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி

ஸ்ரீபெரும்புதூர்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26), கன்னியாகுமரி, குத்தம் விளைச்சல் குளம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (27), இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே நாவலூர் பகுதியில் தங்கி பிள்ளைபாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பைக்கில் மணிமங்கலத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்முக்கு சென்று பணம் எடுத்துள்ளனர். பின்னர் இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் ஜான் ஸ்டீபன் ஆகிய இருவரும் போதையில், மணிமங்கலம்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக நாவலூர் நோக்கி பைக்கை சென்றுகொண்டிருந்தனர். அப்போது கொளத்தூர் பகுதியில் வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் இருவருக்கும் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மரத்தில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Sriepruthur ,Dineshkumar ,Kannyakumari ,Kuttam Yiyakhal Pond ,Cuddalur District ,Sriemushnam ,Dinakaran ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...