×

பைக் திருடிய 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் திருட்டு நடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து போலீசார், வாகனங்களை திருடும் மர்மநபர்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், காட்டாங்கொளத்தூர், சிங்கபெருமாள்கோயில் பகுதியில், மறைமலைநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 2 பேர், பைக்கில் சுற்றி திரிந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பைக்குடன் காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், சிங்கபெருமாள்கோயில் ஜெஜெ நகர், பெரியார் தெருவை சேர்ந்த கலிபுல்லா (எ) மாரி (33), படாளம் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த இர்பான் (23) என தெரிந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்று, அவர்கள்  மறைமலைநகர் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கொடுத்த தகவலின்படி 10 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post பைக் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Thiramalayangar ,Thiramalayanagar ,Chengalpattu district ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...