×

பஸ் டே கொண்டாட்டம்: 20 மாணவர்கள் மீது வழக்கு

பெரம்பூர்: கவியரசு கண்ணதாசன் நகரில் இருந்து பிராட்வே வரை செல்லும் அரசுப் பேருந்து (64 கே)   நேற்று காலை பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. மாதவரம் நெடுஞ்சாலை லட்சுமி அம்மன் கோயில் பேருந்து நிலையம் அருகே வந்தபோது பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 20 பேர் பேருந்தை மறித்து அதன் மீது ஏறி பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.நடத்துனர் இதுபற்றி கேட்டபோது, மாணவர்கள் கேக்கை எடுத்து நடத்துனர் வேலுவின் முகத்தில் பூசி தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து செம்பியம் போலீசார் ரகளையில் ஈடுபட்ட சுமார் 20 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு,  இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உள்ளிட்டோர் அந்த பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர்….

The post பஸ் டே கொண்டாட்டம்: 20 மாணவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bus Day ,Perambur ,Kaviarasu Kannadasan Nagar ,Broadway ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் இருந்து சென்னை...