×

செல்போனில் இருந்த முக்கிய விவரங்களை நடிகர் திலீப் அழித்து விட்டார்: போலீஸ் தகவல்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில், தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி கவுசர், “விசாரணையை தேவையில்லாமல் நீட்டிக்க முடியாது. இந்த வழக்கில் அப்படி என்ன முக்கியத்துவம் உள்ளது,’’ என்று கேட்டார். இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நடிகர் திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சில முக்கிய ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிட்ட வழக்கில் நடிகர் திலீப், அவரது தம்பி உள்பட 3 பேரின் 6 செல்போன்களை ஜனவரி 31ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஜனவரி 29ம் தேதி உத்தரவிடப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே அவர்களது போன்கள்  பார்மெட் செய்யப்பட்டது தடயவியல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கூடுதலாக பரிசோதனை செய்ய வேண்டியதால் விசாரணையை முடிக்க தாமதம் ஆகிறது,’’ என்று கூறினார். பிறகு பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் ஆஜரான வக்கீல் , “நடிகை மீது மிக மோசமான குற்றம் நடத்தப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் யார் செயல்பட்டனர் என்பது உலகிற்கு தெரிய வேண்டும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூற குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை இல்லை,’’ என்று கூறினார். இதையடுத்து விசாரணை 24ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது….

The post செல்போனில் இருந்த முக்கிய விவரங்களை நடிகர் திலீப் அழித்து விட்டார்: போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dileep ,Thiruvananthapuram ,Baladkara ,Dinakaran ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா